ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை அடிச்சு ஊத்தியது. அதிகபட்சமாக மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்கு சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.