TN Heavy Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை! வானிலை மையம் அலர்ட்

Published : Nov 14, 2024, 05:58 PM ISTUpdated : Nov 14, 2024, 06:03 PM IST

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

PREV
14
TN Heavy Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை! வானிலை மையம் அலர்ட்

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும்  லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

24

இந்நிலையில், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34

அதேபோல் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

44

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 7 மணிவரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories