நாளை முதல் தமிழகத்தில் மழை பொளந்துகட்டப்போகுதா? சென்னையிலும் சம்பவம் இருக்காம்! அலறும் வானிலை மையம்!

Published : Dec 10, 2024, 02:56 PM ISTUpdated : Dec 10, 2024, 03:00 PM IST

TN Heavy Rain Alert: தமிழகத்தில் இன்று முதல் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

PREV
15
நாளை முதல் தமிழகத்தில் மழை பொளந்துகட்டப்போகுதா? சென்னையிலும் சம்பவம் இருக்காம்! அலறும் வானிலை மையம்!
Chennai Meteorological

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் எந்ததெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யப்போகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை -தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
Rain News

இதன் காரணமாக இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதையும் படிங்க: School Holiday:டிசம்பர் 13ம் தேதி பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு அலுவலத்திற்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

35
Tamilnadu Rain Alert

அதேபோல் நாளை தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
TN Heavy Rain


12ம் தேதி தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

55
Tamilnadu Heavy Rain

13ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories