சென்னையை நோக்கி திரும்பும் புயல் சின்னம்.! கன மழைக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்

Published : Dec 23, 2024, 10:51 AM IST

வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. 24 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

PREV
14
சென்னையை நோக்கி திரும்பும் புயல் சின்னம்.! கன மழைக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
RAIN CHENNAI

இறுதி கட்டத்தில் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மழையானது தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொட்டியது. பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சென்னையில் மிதமான மழையே பெய்தது. இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு அருகே வந்து மிதமான மழையை கொடுத்த அந்த புயல் சின்னம் ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்தது.
 

24
rain in chennai

காற்றழுத்த தாழ்வு பகுதி

தற்போது மீண்டும் தமிழகத்தை நோக்கி யூ டர்ன் அடித்து வரவுள்ளது. இது தொடர்பாக சென்னையை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24ம் தேதியன்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
Tamil Nadu Rains

தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்

இதன் காரணமாக நாளை (24ம் தேதி) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வலு குறைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. நல்ல மழை மேகங்கள் உள்ளது.

44
heavy rain in tamilnadu

வட மாவட்டங்களில் மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுற்ற மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு வருகிற 25ஆம் தேதி இரவு மற்றும் 26ஆம் தேதி காலை முதல் மழை பெய்யும் என தெரிவித்துளாளர். இந்த மழை பெரிய அளவில் பாதிப்பு இல்லாத மகிழ்ச்சிகரமான மழையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான முதல் லேசான மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளவர்,  இன்று உள் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories