தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்
இதன் காரணமாக நாளை (24ம் தேதி) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வலு குறைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. நல்ல மழை மேகங்கள் உள்ளது.