வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள்!

Published : Feb 26, 2026, 12:06 PM IST

Rain: மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்யும்.

PREV
14

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் ஃபேன் இல்லாமல் பொதுமக்களால் கொஞ்சம் நேரம் கூட இருக்க முடிவதில்லை. பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

24

அதில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்யும். பின்னர் மழை மேகங்கள் கேரளாவை நோக்கி நகர்ந்து அங்கு மழை பெய்யும் என கூறியிருந்தார்.

34

அவர் கணித்தபடியே விருதுநகர் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான சூலக்கரை, சின்னவள்ளி குளம், சத்திர ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

44

அதேபோல் திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், சின்னாளப்பட்டி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீலகிரி, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது பொதுமக்கள், விவசாயிகள் குஷியில் இருந்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories