தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்தும் வெயில் விடாமல் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 105 டிகிரியும், நாகை - 104, கடலூா் - 102.94, மதுரை விமான நிலையம், புதுச்சேரி தலா - 102.02, பரங்கிப்பேட்டை - 101.84, சென்னை விமான நிலையம் - 101.66, சென்னை நுங்கம்பாக்கம் - 101.48, மதுரை நகரம் - 100.76, திருச்சி, திருத்தணி தலா - 100.58 டிகிரி வெப்பம் பதிவானது. வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.