இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் 10ம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை பெற்றுத் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.