10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

Published : Feb 27, 2026, 09:23 AM IST

Public Exam: 12ம் பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை 8.7 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

PREV
14

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும். அதன்படி 12ம் பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை 8.7 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் 10ம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை பெற்றுத் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.

34

அதாவது கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த வினாவில் தவறு அல்லது முரண்பாடு உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். தேர்வு நடைபெற்ற அதே நாளிலேயே அந்தந்த பாடம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவேண்டும்.

44

இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இந்த விவரங்களை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories