ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Published : Jun 10, 2026, 06:07 PM IST

Gold Medal: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு மாநில விருதுகளை அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் ஜூன் 25, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

PREV
15

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிவர்கள் விருது பெற ஜூன் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

25

அதாவது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் மாநில விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ் காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2026 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.

35

விருதின் வகை மற்றும் விவரம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்,

*மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்

45

மேற்காணும் விருதுகளுக்கு , https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 25.6.2026க்குள் விண்ணப்பிக்கலாம். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

55

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 25.6.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு சுதந்திர தின விழா நிகழ்வில் முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories