இந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வு காரணமாக ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும், பள்ளிகொண்டா டோல்கேட் நிர்வாகம் இலவச டீ வழங்கத் தொடங்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகை வாகன ஓட்டுநர்களுக்கு இந்த டீ வழங்கப்படுகிறது. சென்னை–பெங்களூர் மற்றும் பெங்களூர்–சென்னை என இரு மார்க்கங்களிலும் செல்லும் வாகனங்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.
மேலும், டோல்கேட் அருகே ஒலிபெருக்கி மூலம் டிரைவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை இந்த டீ வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பனிப்பொழிவு காலம் நீடிக்கும் வரை இந்த சேவை தொடரும் என்றும் டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முன்னிறுத்திய இந்த நடவடிக்கை, பள்ளிகொண்டா டோல்கேட்டில் பயணம் செய்யும் டிரைவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.