விவசாயிகள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கோங்க.! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Jul 03, 2025, 02:23 PM ISTUpdated : Jul 03, 2025, 02:26 PM IST

கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.  கோமாரி நோய் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், அரசு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாமை அறிவித்துள்ளது.

PREV
14
விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கறவை மாடுகள் வாங்குவதற்காக பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதமும், பயனாளியின் பங்கு 5 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடைகளை விவசாயிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கோமாரி நோயாயில்  பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. 

24
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்

 கோமரி நோய் என்பது கால்நடைகளை, குறிப்பாக பசு, மாடு, ஆடு, பன்றி மற்றும் எருமை போன்றவற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். இது மிகவும் தொற்றக்கூடியது மற்றும் வேகமாகப் பரவக்கூடியதாகும். இந்த நோயானது நோய்த்தொற்று உள்ள கால்நடைகளுடன் ஆரோக்கியமான கால்நடைகள் நேரடியாகத் தொடர்பு கொள்வது மூலம் பரவுகிறது. 

மாசுபட்ட தீவனம், நீர், காற்று, வாகனங்கள், உபகரணங்கள் அல்லது மனிதர்களின் ஆடைகள் மூலமாகவும் பரவி வருகிறது. நோயுற்ற கால்நடைகளின் உமிழ்நீர், பால், சிறுநீர், மலம் மற்றும் வாய், கால் பகுதிகளில் உருவாகும் கொப்புளங்களில் உள்ள திரவம் பாதிப்பு ஏற்படுகிறது.

34
கோமாரி நோயின் அறிகுறிகள்

வைரஸ் கால்நடைகளின் வாய் மற்றும் கால் பகுதிகளில் உள்ள மென்மையான திசுக்களைத் தாக்குகிறது. இதனையடுத்து அதிக காய்ச்சல், வாயில் மற்றும் கால்களில் கொப்புளங்கள் மற்றும் புண்கள், அதிக உமிழ்நீர் சுரத்தல், பால் உற்பத்தி குறைவு கர்ப்பிணி விலங்குகளில் கருச்சிதைவு போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து  கால்நடை விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோமாரி நோய்க்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளது.

கோமாரி நோய் - ஒரு நச்சுயிரினால் ஏற்படுகிறது. இது கால்நடை வளர்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் ஆகும். நான்கு மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து பசு மற்றும் எருமை இன மாடுகளுக்கு தடுப்பூசி ஜீலை-2-ஆம் தேதி முதல் ஜீலை-31-ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

44
கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம்

கோமாரி  நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், பசியின்மை, வாய், நாக்கு மற்றும் கால் குளம்புகளிடையே புண் மற்றும் பசுவின் மடிகளில் புண்கள் காணப்படும். எனவே கால்நடை விவசாயிகள் அனைவரும் தங்கள் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இது தொடர்பாக விபரம் அறிய அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனையினை அணுகலாம் எனவும் அந்த அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories