AIADMK: சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்விகளை அடுத்து சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார்.
25
இபிஎஸ்க்கு எதிராக சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்
குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் அவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இபிஎஸ் அணியினர் சபாநாயகருக்கு கடிதம் அளித்தனர். இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மற்றொரு புறம் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்றுக்கொண்டனர்.
35
ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் விஜயபாஸ்கர்
ஆனால் சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியானது. அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை கட்சியை சேர்க்கவும் அமைச்சர் பதவி வழங்கவும் தவெகவில் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்ல தவெக சென்றால் உரிய மரியாதை கிடைக்காது என்றும் கொள்கை ரீதியாக செயல்பட வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று விஜயபாஸ்கர் நினைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு திமுக தலைமை பச்சை கொடி காட்டியதை அடுத்து அவர் தாய் கழகமான திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஷ்டமி, நவமி முடிந்து முடிந்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சி.விஜயபாஸ்கர் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
55
அதிர்ச்சியில் ரகுபதி
இதனிடையே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருகையால் புதுக்கோட்டையில் தனது செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.