இந்த ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க மறுப்பதாகவும், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளான நம்பியூர் வடக்கும் ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி, கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு, மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கே.எஸ்.மோகன் குமார் உள்ளிட்டோர் பொறுப்பில் இருந்துது நீக்கப்பட்டுள்ளார்.