EPS accused of poor law and order in Tamil Nadu : காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு மாநிலத்தில் காவல்துறை எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பொறுத்துதான் அம்மாநிலத்தின் வளர்ச்சி இருக்கும் என குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் இந்தியாவில் அமைதியான, பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், குறிப்பாக தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்ததாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குறிப்பிட்டார். தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருப்பதால், காவலர்கள் அனைவரும் பணிச்சுமையில் இருப்பதாக தெரிவித்தார்.