அதிமுக ஆட்சி அமைத்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அதிமுக 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதியாக சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
24
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10000
அந்த வகையில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
ஆண்டு தோறும் பொங்கல் பரிசு.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
கடன் தள்ளுபடி.. நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள கடன் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும்.
34
பட்டதாரிகளுக்கு ரூ.2000
மாணவர்களுக்கு ரூ.2000.. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும். அதே போன்று 12ம் வகுப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
மின்சார மானியம்.. தற்போது தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது அதிமுக ஆட்சியில் 450 யூனிட்டாக உயர்த்தப்படும். இதே போன்று விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது அதிமுக ஆட்சி அமைந்ததும் 1400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
மீனவர்களுக்கு ரூ.12000.. மீன்பிடி தடைக் காலத்தில் வேலை இல்லாமல் காத்திருக்கும் மீனவர்களுக்கு தற்போது ரூ.8000 வழங்கப்படுகிறது. இது அதிமுக ஆட்சி அமைந்ததும் ரூ.12000ஆக உயர்த்தப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை பழனிசாமி வெளியிட்டுள்ளார்.