இன்று தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் நடந்த போதும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்த போது எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சல் அவதிப்பட்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.