மருத்துவ விதிகளுக்கு புறம்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர், இர்பான், மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இர்பானுக்கு, தனியார் மருத்துவமனைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம், ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால், தனியார் மருத்துவமனை அக்டோபர் 24-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.