மேலும, ரமேஷ், செல்வமணி மற்றும் கவி பிரசாத் ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 பிப்ரவரி வரை முக்கிய நபர்கள், சில அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெற்றுள்ளனர் எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2024 ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வை நடத்தியது, அதன் முடிவுகள் 2025 பிப்ரவரி 17 அன்று வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகு தகுதி பெற்றவர்களுக்கு ஆலோசனை (counselling) நடைபெற்றது. இறுதி முடிவுகள் ஜூலை 4 அன்று அறிவிக்கப்பட்டன. ஆனால்,
முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே, உதவியாளர்களின் கைப்பேசிகளில் இருந்து, இடைத் தரகர்கள் அனுப்பிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஆலோசனை அழைப்புக் கடிதங்களை மீட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவ்வாறு பரிந்துரைத்த நபர்கள் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.