சென்னை மக்களே! இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. இதோ முழு விவரம்

Published : Feb 20, 2026, 12:46 PM IST

Electric Train: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றம்.

PREV
15
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வப்போது பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25
தெற்கு ரயில்வே

இதுதொடர்பாக சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள் 2026 இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

35
மின்சார ரயில் மேடை மாற்றம்

சென்னை கடற்கரை தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை, அனைத்து மின்சார (EMU) ரயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையான விரைவுப் பாதையில் இயக்கப்படும்.

அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம் சென்னை கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையான விரைவுப் பாதை இயக்கப்படும்.

45
ரயில் எண்கள் மற்றும் நேர மாற்றம்

இந்தக் காலகட்டத்தில் (2026 பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு A-வில் (Annexure - A) கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
சிறப்பு பேருந்துகள்

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories