SSLC Exam: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் விவரங்களில் பெயர், பிறந்த தேதி திருத்தம் செய்யலாம்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் SSLC பொதுத்தேர்வு மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.
24
அரசு தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பிப்ரவரி 14 பிற்பகல் முதல் 18 வரையிலான நாட்களில் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
34
பள்ளி மாணவர்கள் பெயர் திருத்தம்
தற்போது, பெயர்பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் விவரங்களில் பெயர், புகைப்படம், பிறந்ததேதி (வயது தளர்வாணை பெற்றவர்கள் உட்பட). பயிற்றுமொழி ஆகியவற்றில் திருத்தம் (Correction) மேற்கொள்ளவும்.
விடுபட்ட மற்றும் புதியதாக சேர்க்கைப் பெற்றுள்ள மாணவர்களை சேர்த்திடவும் (Addition), (Death) மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் நீக்கம் (Deletion) செய்வதற்கும் பள்ளிகளிலிருந்து விவரங்களைப் பெற்று தமிழ்நாட்டில் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகங்களிலும், புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) அலுவலகங்களிலும் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password-ஐ பயன்டுத்தி இன்றைக்குள் திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.