குறிப்பாக கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமாரை எந்த அளவுக்கு தர லோக்கலாக இறங்கி கடுமையாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து வந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து அவரது அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.