இதனிடையே ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு (திருமகன், இளங்கோவன்) வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஈரோடு தொகுதியில் திமுக போட்டியிடும். காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முழுமையாக திமுகவுக்கு அளிக்கும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.