கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாவட்டப் பொறுப்பாளர் மா. அறிவானந்தம் (எ) அறிவரசு அவர்கள் தலைமையில் 180 பேர்களும்; கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 120 பேர்களும்; தேமுதிக-வைச் சேர்ந்த நிர்வாகிகளான வேடியப்பன், மாதையன், சுரேஷ், சுகுணா, ரமேஷ் உள்ளிட்ட 20 பேர்களும், பா.ம.க-வைச் சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட 15 பேர்களும்;
மதிமுக-வைச் சேர்ந்த நாகேந்திரன், பாரதி, சிலம்பூ, சேகர், பழனிவேல் உள்ளிட்ட 25 பேர்களும் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், M.L.A, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.