ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லையில் வரலாறு காணாத அளவில் தொடர் கனமழை கொட்டி வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண், பாளையம்கோட்டை, புதிய பேருந்து நிலைய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது