Published : Apr 18, 2025, 12:10 PM ISTUpdated : Apr 18, 2025, 12:23 PM IST
கடலூரில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் நிலையத்தில் அவர் செய்த அலப்பறையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சு.கீனனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஐயப்பன்(21). இவர் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மாலை மதுபோதையில் கருவேப்பிலங்குறிச்சி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த மூதாட்டி அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஐயப்பனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
24
Drunk youth argument
ஐயப்பனின் அலப்பறை வீடியோ
பின்னர் புஃல் மப்பில் இருந்த ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் போலீசாரிடம் ஐயப்பன் செய்த அலப்பறை வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்: என் டிரஸ்ஸை கிழிச்சிட்டீங்க, எப்போ புது டிரஸ் எப்போ வாங்கி தருவீங்க. உங்க டீசர்ட் எனக்கு பாத்தாதுதான். எப்படியும் இன்னைக்கு நைட்டு புல்லா அடிச்சு கிழி கிழினு கிழிக்க போறீங்க. ஒரு பிரியாணி ஒரு குவாட்டர் வாங்கிட்டு வாங்க. அதுக்கப்புறம் என் மேல கை வைங்க. என் உடம்புல தெம்பு இல்லை. அதுக்கு அப்புறம் மேல கை வையுங்க. இல்லாட்டி கொலை கேஸ்ல உள்ள போயிடுவீங்க.
44
Drunk youth argument with police
எல்லாத்துக்கும் துணிந்தவன் நான்
அப்புறம் ஜட்ஜ் அம்மாட்ட, நைட்டு புல்லா வச்சிருந்தோம் செத்துட்டானு சொல்லுவீங்க. எல்லாத்துக்கும் துணிந்தவன் நான் என கூறுகிறார். இதை பார்க்கும் போது தமிழகத்தில் மது, போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.