மேலும், மலையில் அமைந்துள்ள கோயில்களைப் பாதுகாக்கவும், மலையைச் சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையிடம் மனு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது புதிய மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.