பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ''திமுக எங்களின் பழைய கூட்டாளி. திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்திருந்தோம். இப்போது சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி வைத்திருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும். பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்க திமுகவுடன் ஒன்று சேர்ந்துள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல
கூட்டணி குறித்து காங்கிரஸின் 2ம் கட்ட தலைவர்கள் பேசியது அவர்களது தனிப்பட்ட கருத்து. இது காங்கிரசின் கருத்து அல்ல. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை திமுக தலைமையிடம் பேசி முடிவெடுக்கும். காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்போம்
திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.எங்களுக்கும் சில லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்போம்'' என்று தெரிவித்தார்.
கே.சி.வேணுகோபாலின் எச்சரிக்கையால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பிரச்சனை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.