இந்த நிலையில் இன்று காவிரி ஆணைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு திறந்துவிட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது முன்கூட்டியே திறக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது.