டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் மாறாத இபிஎஸ்! இப்படி பேச நா கூசவில்லையா? முதல்வர் ஸ்டாலின்!

Published : May 21, 2025, 02:39 PM IST

முதல்வர் ஸ்டாலின் மே 24 அன்று நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த ஆண்டு பங்கேற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 

PREV
15
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு மே 24-ல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில் இந்தாண்டு பங்கேற்க உள்ளார்.

25
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? என கூறியிருந்தார்.

35
டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம்

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நீதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

45
வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்.

55
நிதியைப் போராடிப் பெறுவேன்

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என காட்டமாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories