ஆனால் வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே கோபம் அடங்கவில்லை என்றும், பாதுகாப்பு ஊழியர்கள் இரு குழுக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிய பின்னரும் பதற்றம் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், யான்சி மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர் தரப்பினர் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார் மீது கற்கள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார் குழுவினர், இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று மோதி தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.