ரஜிதாவுக்கு தெரியாமல் ரீனாவுடன் செல்வக்குமார்.! பார்க்கில் 17 வயது சிறுவன் செய்த சம்பவம்! சென்னையில் அதிர்ச்சி!

Published : Jan 17, 2026, 04:25 PM IST

சென்னையில், இரண்டு பெண்களுடன் கள்ளக்காதலில் இருந்த செல்வக்குமார் என்ற கட்டிடத் தொழிலாளி, அவர்களுடனான தகராறில் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

PREV
14

சென்னையில் திரிசூலம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வக்குமார் (22). கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரீனா(24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் திரிசூலம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

24

இதனிடையே ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடன் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் அடிக்கடி ரகசியமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் தோழி ரீனாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவரும் செல்வக்குமாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஜிதா மற்றும் ரீனாவுக்கு 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் சில ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

34

இதனை அறிந்த செல்வக்குமார் தனது கள்ளக்காதலிகள் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்தது மட்டுமல்லாமல் அவர்களுடன் தகராறு செய்தார். இதனால் ரீனா, ரஜிதா இருவரும் செல்வக்குமாரை, திரிசூலத்தில் உள்ள பூங்காவுக்கு நைசாக பேசி வரழைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது கூட்டாளியான அலெக்ஸ் ஆகியோர் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் ஆத்திரம் அடங்காததால் மர்ம மர்ம உறுப்பையும் அறுத்தனர். செல்வக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பித்தனர்.இதுபற்றி உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

44

இதுபற்றி உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories