கோபிசெட்டிபாளையம் தொகுதியில, அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்த கே.ஏ. செங்கோட்டையன் 3,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துல முன்னிலை வகிக்கிறார். அவர் 15,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கார். திமுக வேட்பாளர் நல்லசிவம் சுமார் 11,000 வாக்குகளுடன் பின்தங்கியிருக்கார். வில்லிவாக்கம் தொகுதியில, தவெக-வின் ஆதவ் அர்ஜுனா 8,436 வாக்குகள் பெற்று, 2,038 வாக்குகள் வித்தியாசத்துல முன்னிலையில இருக்கார்.
பாஜக தலைவர் கீதா பிரியாபேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான நிலையில இருக்கு"ன்னு சொல்லிருக்கார். வாக்கு எண்ணிக்கை முன்னேறிட்டு இருக்கிற நிலையில, அதிமுக மாநிலத்துல இரண்டாவது பெரிய கட்சியா உருவெடுக்கும்னு ஆரம்பகட்ட நிலவரங்கள் காட்டுறதா அவர் சொன்னார். இந்தத் தேர்தல்ல, குறிப்பா இளம் வாக்காளர்கள் மத்தியில வாக்குப்பதிவு ஆர்வம் அதிகமா இருந்ததாவும் அவர் குறிப்பிட்டார்.