திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் போலீசார் கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.