அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போது வரை பாமகவில் தலைவராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆகையால் பாமகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடா ராமதாஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தினர். இதனையடுத்து ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், அன்புமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.