தமிழக அரசு பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உரிய முறையில் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டியானது தள்ளுபடி செய்யப்படும். இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், க.க.நகர் கோட்டத்திற்குட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர், மதுரவாயல், அசோக்நகர், MTB Scheme, இராஜாஅண்ணாமலைபுரம். விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 428-புலியூர், பழைய இராமாபுரம். CIT நகர் மேற்கு ஆகிய திட்டப்பகுதிகளில் தவணை முறையில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரர்களில்