இலவசமாகவே கட்டிட கழிவுகளை கொட்ட புதிய இடம்.! மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published Oct 9, 2024, 2:05 PM IST

சென்னை மாநகராட்சி, நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் கட்டிட கழிவுகள்

நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுற்று சூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதும் தொடர்ந்து கட்டட கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுவதால் நீரோட்டம் பெரிதும பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் இதனை கண்காணிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக கண்காணித்திட ஒவ்வொரு மண்டலத்திலும்  கண்காணிப்புக் குழு அமைத்து, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  காலிமனையில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலத்திலும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவர்களுக்கு ரூபாய் 79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் அபராதம் விதிப்பு

மேலும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவு கொட்டும் நபர்கள் அபராதம் விதிக்கும் முறையே டிஜிட்டல் மயமாக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  வாகன சோதனையின் போது போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போன்ற டிஜிட்டல் கருவியை சோதனை அடிப்படையில்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக 500 கருவிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நடைமுறையானது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு 2000 பணியாளர் தேர்வு.! எந்த தேர்வும் இல்லை- நேரடி நியமனம் - வெளியான முக்கிய அறிவிப்பு

Latest Videos


இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள தகவலில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டடக் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் தனியார் லாரி உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், கட்டிட கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் இதற்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் 15 இடங்களில் எந்தவிதமான கட்டணமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் பொது இடங்களில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே கட்டடிங்களை இடிப்பவர்கள்  இவ்வசதிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்படும் -எச்சரிக்கை

இதுகுறித்த மேலும் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர்/கசடுகளை நீர்நிலைகள்/பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்களும் 1913 என்ற உதவி எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

click me!