அபராதம் விதிக்கப்படும் -எச்சரிக்கை
இதுகுறித்த மேலும் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர்/கசடுகளை நீர்நிலைகள்/பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்களும் 1913 என்ற உதவி எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.