இந்த மாற்றங்களில் முக்கியமானது, விமான நிலையத்திற்கு செல்லும் இரண்டு நுழைவு வாயில்களில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது. தற்போது ஜிஎஸ்டி ரோட்டில், திரிசூலம் ரயில் நிலையம் எதிரே உள்ள முக்கிய நுழைவாயில் மட்டுமே செயல்படும். தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், முன்பு பயன்படுத்திய இரண்டாம் நுழைவு-யை பயன்படுத்த முடியாது. அவை அனைத்தும் முக்கிய நுழைவாயிலுக்கு திருப்பி விடப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் மற்றும் மார்ஷல்கள் ஈடுபட்டுள்ளனர்.