மேலும் விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 6 பேரில் 2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20) இருவரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.