கிடு கிடுவென நிரம்பிய செம்பரம்பாக்கம்.! சென்னை மக்களுக்கு அலர்ட்.?

Published : Dec 12, 2024, 09:59 AM IST

தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால்,  செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
கிடு கிடுவென நிரம்பிய செம்பரம்பாக்கம்.! சென்னை மக்களுக்கு அலர்ட்.?
RAIN CHENNAI

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் மழையானது கொட்டோ கொட்டு என கொட்டியது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்தது. அணையில் இருந்து பல லட்சம் கன அடி அளவிற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.  பல ஊர்கள் தண்ணீரில் மூழ்கியது. வீடுகள் மற்றும் விவசாய பயிர்கள் அடித்து செல்லப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஒரு வாரம் முழுவதும் தமிழகத்திற்கு மழை பிரேக் விடப்பட்ட நிலையில் மீண்டும் மழையானது கொட்டி வருகிறது. அதன் படி நேற்று இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது.

24
Chennai Water

உயரும் நீர்மட்டம்

இதன் காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 35 அடி உயரமுள்ள பூண்டி அணையில் தற்போது 34..05  கன அடி நீர் உள்ளது. அந்த வகையில் 87 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. செங்குன்றம் ஏரியில் மொத்த கொள்ளளவான 21.20 அடியில் 18.80 கன அடி நீர் மட்டம் உள்ளது. 84 சதவிகித நீர் இருப்பு உள்ளது. இதே போல சோழவரத்தில் 22 சதவிகித நீர் இருப்பு மட்டுமே உள்ளது. 
 

34
chennai dam water level

செம்பரம்பாக்கம் நீர் இருப்பு

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை அணையில் மொத்த கொள்ளவான 36.61 அடியில் 30.90 அடி நீர் மட்டம் உள்ளது. வீராணம் ஏரியில் 8.50 கன அடி நீர்மட்டத்தில் தற்போது 6.55 கன அடி நீர்மட்டம் உள்ளது.  இதனிடையே சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட  21.18 கன அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளது.  மொத்தமாக 80 சதவிகித நீர் இருப்பு உள்ளது.   
 

44
Chembarambakkam Dam

செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்ற வாய்ப்பு

இதனிடையே தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது 713கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. எனவே இன்று இரவுக்குள் 22 அடியை செம்பரம்பாக்கம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீரின் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி 22 அடியை செம்பரம்பாக்கம் எட்டும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அடையார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

click me!

Recommended Stories