அதிரடி மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Sep 01, 2025, 12:21 PM IST

தமிழக அரசுப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (SMC) வருகைப் பதிவு முறையில் பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது. 

PREV
14

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC) அமைக்கப்பட்டுள்ளன. இது கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு 2022ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதில் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இந்த குழுவின் நோக்கமானது பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தலை உறுதி செய்வது, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவையாகும்.

24

இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து 2024-26ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டமானது கடந்தாண்டு முதல் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து சென்ற மாதத்துக்கான கூட்டம் ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட்டது.

34

இதில் பள்ளிகள், மாணவர்கள் வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையே எஸ்எம்சி உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அதன்படி வருகைப் பதிவு செயலியில் கூட்டத்தில் கலந்துகொண்டவர் (Present), பங்கேற்கவில்லை (Absent) ஆகியவற்றுடன் கூடுதலாக காலியிடம் (Vacant) எனும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள தேவையில்லை.

44

ஒருவேளை அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் வருகையை பதிவு செய்யவேண்டாம். அதற்குமாறாக செயலியில் அவர்களுக்கு காலியிடம் என குறிப்பிட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories