தமிழக அரசு ஓசூர் விமான நிலையத்துக்காக ஏற்கெனவே அனுமதி கேட்டபோது இதே காரணத்தை தான் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று மத்திய அரசு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுவும் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
மறுபக்கம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு
இது ஒருபக்கம் இருக்க, ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் சுமார் 2,300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் விளை நிலங்களை விட்டுத்தர முடியாது என சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.