மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணைக்கும், ஒரு நபர் ஆணைய விசாரிக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இறங்கியது. முதலில் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.
300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன்
வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதில் 10க்கும் மேற்பட்ட வணிகர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து சம்மன் அனுப்பியவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.