விஜய்யை தொடர்ந்து சிபிஐ வலையில் சிக்கிய தமிழக டிஜிபி.. துருவி துருவி கேட்கப்படும் கேள்விகள்!

Published : Jan 12, 2026, 02:30 PM IST

CBI Grills TN DGP in Karur Stampede Case: கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை தொடர்ந்து தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

PREV
13
விஜய்யிடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) தலைநகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபக்கம் விஜய்யிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், மறுபக்கம் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.

23
டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக ஆஜர்

கரூர் சம்பவம் நடந்தபோது டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார். மேலும் கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அப்போது செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்திருந்தார். அந்த வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர்.

சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி கேள்வி

காவல்துறை சரியாக பாதுகாப்பு வழங்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். தவெக கேட்ட இடத்தை கொடுக்காமல் நெருக்கடியான இடத்தை கொடுத்தனர் என்று காவல்துறை மீது தவெகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

33
விஜய் தாமதமாக வந்தாரா?

மேலும் கரூரில் என்ன நடந்தது? தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தாரா? கரூரில் பிரசாரம் செய்ய தவெக கேட்ட இடத்தை காவல்துறை கொடுக்கவில்லையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் துருவித் துருவி கேட்டு வருகின்றனர். கரூர் சம்பவம் நடந்த வேளையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பின்பு ஆயுதப்படை டிஜிபியாக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories