நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மூன்று கடிதம் அனுப்பியிருந்தது. அதில் இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.