மேலும் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக உடல்களை பல்வேறு இடங்களில் வீசியதாக கூறியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. பெருங்குடி குப்பை கிடங்கில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமார் உடல் வீசியதை அடுத்து அங்கு தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் மூன்று நாட்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் முனிதா குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த தேடுதல் பணியில் 50 காவலர்கள், 25 மாநகராட்சி ஊழியர்கள் தேடியது குறிப்பிடத்தக்கது. மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரன்களை தடுக்க முயன்ற போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.