சென்னை ECR-ல் அசுர வேகத்தில் வந்த BMW கார்.. டாக்டர் மாணவி உயிரி*ழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்!

Published : Dec 11, 2025, 03:26 PM IST

Car Accident: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது பிஎம்டபுள்யூ கார் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
13

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அசுர வேகத்தில் வந்த பிஎம்டபுள்யூ கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதில் குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவி மிஸ்பா பாத்திமா (21) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

23

மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

33

மேலும் உயிரிழந்த மிஸ்பா பாத்திமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு காரில் புதுச்சேரி சென்ற 10 மாணவர்கள் சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை அதி வேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியது கோவை அபினந்தன்(29), நெல்லையை சேர்ந்த செண்பக விநாயகம், நவியா அனைவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories