* மக்கள் பறவை காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை
* எங்கேனும் காகம் மற்றும் பறவை இறந்த விவரம் அறியப்பட்டால் உடனடியாக கால்நடை துறைக்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
* யாருக்கேனும் காய்ச்சல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை
அணுகி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை நன்கு சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.
* பறவை காய்ச்சலை பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்.
* பறவை காய்ச்சல் பற்றிய சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எனவே பொதுமக்கள் பறவை காய்ச்சல் பற்றிய அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.