பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? பரபரப்பு தகவல்.. முட்டை, இறைச்சியை சாப்பிடக்கூடாதா?

Published : Feb 06, 2026, 10:18 AM IST

Bird Flu: சென்னையில் அடையார் பகுதிகளில் இறந்த காகங்களுக்கு H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா எனும் பறவைக் காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

PREV
15
காகங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

சென்னை அடையார், காந்தி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், எச்5என்1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

25
பறவை காய்ச்சல்

இதனையடுத்து பறவைகள் உயிரிழந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதில், உங்கள் பகுதிகளில் திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்க வேண்டு. திடீரென பறவைகளோ, விலங்குகளோ உயிரிழந்து கிடந்தால் அதை வெறும் கையால் தொடக்கூடாது. பறவைகள் இறந்தால் முறையாக அப்புறப்படுத்த ஆழமாக குழி தோண்டி அந்த பறவையை புதைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

35
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?

இந்நிலையில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

45
பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள்

* ப்ளு போன்ற அறிகுறிகள் (ILI) - இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள் இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

55
முட்டை, இறைச்சியை தவிர்க்க வேண்டும்

* அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

* பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.

* மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104 ஐ தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories