5 நாட்களாக தொடரும் தடை
அந்த சம்பவத்தின் எதிரொலியாக அன்றைய தினம் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
5-வது நாளாக இன்றும் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தடை தொடருகிறது.