இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட பள்ளிக்கல்வித்துறை!

Published : Mar 06, 2026, 11:33 AM IST

தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை .

PREV
15
தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

25
மதம் சார்ந்த நிகழ்வுகள்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

35
பள்ளிக்கல்வித்துறை

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில்: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன்பின்னரோ எந்தவொரு நிகழ்ச்சியோ, கூட்டமோ, பிரசாரம் மற்றும் அறிவுரைகள் வழங்கலோ, அல்லது எந்தவொரு வெளிநபரோ, சங்கமோ அல்லது அமைப்பின் எந்த ஒரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்யவும் அல்லது நடத்தவும் கூடாது.

45
முன் அனுமதி பெற வேண்டும்

அதேபோல், பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம் ஆகியவற்றை நடத்த பயன்படுத்தக் கூடாது. கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள் போன்ற செயல்பாடுகள், அவை மதம், அரசியல் சாராமல், பள்ளியின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், இதுசார்ந்து அரசால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

55
மாணவர்கள் இடையே ஒற்றுமை

இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்த அடிப்படையில் மாணவர்கள் இடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும், நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிப்பதாக இருக்கும். எனவே இவற்றை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories