வார விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

Published : May 14, 2025, 03:20 PM ISTUpdated : May 14, 2025, 03:25 PM IST

கோடை வெயிலின் தாக்கத்தால் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. 

PREV
15
கோடை வெயிலுக்கு சுற்றுலா

கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குளுமையான இடங்களுக்கு சுற்றுலாவிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலான ரயில்கள் முன் பதிவு முடிவடைந்து விட்டது. கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தனியார் பேருந்துகளில் பயணிக்கலாம் என பார்த்தால் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

25
வார விடுமுறை, முகூர்த்த நாள் சிறப்பு பேருந்து

இதன் படி, 16/05/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 17/05/2025 (சனிக்கிழமை) மற்றும் 18/05/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

35
தமிழகத்தில் சிறப்பு பேருந்து அறிவிப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 16/05/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 17/05/2025 (சனிக்கிழமை) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 16/05/2025 அன்று 24 பேருந்துகளும், 

17/05/2025 அன்று 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16/05/2025 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும், 17/05/2025 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

45
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கம்

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

55
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,817 பயணிகளும், சனிக்கிழமை 6,721 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,623 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories